பொதுவாக, இலக்கியம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். இங்குக் கிராம மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் படைப்புகளையும் குறித்த இலக்கியமே நாட்டுப்புறவியல் இலக்கியம் ஆகும். நாட்டுப்புறவியல் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல் என்றால் என்ன? இச்சொல்லுக்கான பொருளை முதலில் புரிந்து கொண்டால் தான் நாட்டுப்புற இலக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான விளக்கத்தை இரண்டு நிலைகளில் அறிந்து கொள்ளலாம்.
அகராதிப் பொருள்
'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது'
அறிஞர்கள் கருத்து:
அறிஞர்கள் 'நாட்டுப்புறவியல்' என்ற சொல்லுக்குப் பதில் நாட்டார் வழக்காறு என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வறிஞர் நா.வானமாமலை அவர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் 'நாட்டார் வழக்காறு' என்பதாகும். இவர் வழியைப் பின்பற்றி அறிஞர் தே. லூர்து என்பாரும் நாட்டுப்புறவியல் என்பதற்கு 'நாட்டார் வழக்காறு' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர் ஆலன் டண்டி என்பவர், மக்கள் காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார்.
கைவினைப் பொருட்கள் :
மேலும் நாட்டுப்புற மக்களின் கைவினையின் ஆற்றல் திறத்தால் உருவாகும் பொருட்களுக்குத் தனித்தன்மை மிகுந்த சிறப்புகள் உண்டு. இத்தகு பொருட்களும் நாட்டுப்புற மக்களின் கலை நயத்தால் உருவாகும் தன்மையன என்பதால் இக்கைவினைப் பொருட்களும் கலை என்பதில் இடம் பெறும்.
கிராமத்து மக்கள் காலங்காலமாகப் பாரம்பரியமாகச் செய்துவரும் பொருட்கள் உண்டு. இவர்களது கைவினைத் திறத்தைக் கண்டு மக்கள் வியந்து நிற்பார்கள். இவர்களது கைவினைகள்: கைவினைப் பொருட்கள்
1) மண்பாண்டக் கலை
2) காகிதப் பொம்மைகள் செய்தல்
3) மரப் பொம்மைகள் செய்தல்
4) பாய் பின்னுதல்
5) மரவேலைப்பாடு
6) உலோகச், சிற்ப வேலைப்பாடு
7) கல் சிற்ப வேலைப்பாடு
8) சப்பரம்,தேர், தெய்வம் அலங்கரிக்கும் கலை
9) நெசவுக் கலை
10) தஞ்சாவூர்த் தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல்
நம்பிக்கைகள்:
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் இலக்கியம், கலைகள், கைவினைப் பொருட்கள் போன்று இடம் பெறும் மற்றொரு முக்கியக்கூறு நம்பிக்கை என்பதாகும். நம்பிக்கையினை மனிதனின் மூன்றாவது கை என்பர். இந்நம்பிக்கை மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம் பெறுவதாகும். இயற்கையின் மழை, விலங்கு, பறவை குறித்தும்; மனிதரின் பிறப்பு, பருவமடைதல், விருந்தினர் வருகை, உழவு, என்பவை பற்றியும்; திசை, நட்சத்திரம், ராசி, கோலமிடுதல், விதி பற்றிய சிந்தனை, இறப்பு போன்ற பலவற்றிலும் கிராமத்து மக்களிடம் காணப்படும் அழுத்தமான நம்பிக்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்நம்பிக்கைகளில் காரண காரியங்களை ஆராய முடியும். அறிவியல் போன்று வன்மை, மென்மைகளை ஆராய்தல் என்னும் போது கிராமத்து மக்களின் உள்ளப்பாங்கு, பண்பாடு ஆகியவற்றை அறிய முடியும்.
நாட்டார்:
நாட்டுப்புறத்து மக்களாம் கிராமத்து மக்களை நாட்டார் என்றும் கூறுவதுண்டு. இச்சொல் குறித்த தகவல்கள் சிலவற்றை அறிந்து கொள்வது மிகவும் தேவையானதாகும். 'நாட்டார்' என்ற சொல் மக்களுள் ஒரு நிலப்பகுதியினர் என்ற பொருளில்தான் நாட்டுப்புற இலக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'நாட்டார்' என்ற சொல் இக்காலத்தில் பயன்படத் தொடங்கி விட்டது. இதனால், 'நாட்டார்' என்பது நாட்டுப்புறத்தாரை மட்டுமே குறிக்கும் என்பதை நாட்டுப்புறவியல் இலக்கியம் கற்பவர்கள் தெளிவுபட முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டார் – சொல்லாட்சி:
நாட்டுப்புறவியல் அறிஞர் நா. வானமாமலை, முதன்முதலில் நாட்டுப்புறத்தாரை 'நாட்டார்' என்று குறிப்பிட்டு அவர்களது வரலாற்றினை, இலக்கியத்தைக் குறித்து எழுதுவதை 'நாட்டார் வரலாறு’ என்று எடுத்துக் கூறினார். தமிழ்ப் பேரகராதி நாட்டார் என்ற சொல் குறித்துப் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றது.
அகராதியின் கருத்துப்படி 'நாட்டார்' என்பது ஒரு கூட்டத்தாருக்கு உரியது என்பதாக இல்லை. மேலும் 'நாட்டார்' என்ற சொல்லாட்சி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட மக்களைச் சுட்டுவதாக வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகு வரன்முறைகளுக்கு உட்படாத சொல்லாக, நாட்டுப்புறத்தாரே 'நாட்டார்' என்று நாட்டுப்புறவியல் அறிஞர்கள் விளக்கம் தந்தனர். இச்சொல்லின் அடிப்படையில் நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல்வேறு கலைச் சொற்களையும் உருவாக்கியுள்ளனர். அச்சொற்களைத் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.
கலைச்சொற்கள் பட்டியல்:
• நாட்டுப்புற வழக்காறு
• நாட்டுப்புறவியல்
• நாட்டுப்புற இலக்கியம்
• நாட்டுப்புறப் பாடல்
• நாட்டுப்புறக் கலை
• நாட்டுப்புற நம்பிக்கைகள்
இச்சொற்களை அறிந்து கொண்டால் இவ்விலக்கியம் குறித்துப் படிப்பதற்குத் துணையாக இருக்கும்.
நாட்டுப்புறக் கதைகள்:
நாட்டுப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வி போன்று, அறக்கோட்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைக் கீழ்க்காணும் முறையில் பகுத்து உரைப்பர். அவையாவன:
1) மனிதக் கதைகள்
2) விலங்குக் கதைகள்
3) மந்திர தந்திரக் கதைகள்
4) தெய்வக் கதைகள்
5) இதிகாச புராணக் கதைகள்
6) பல்பொருள் பற்றிய கதைகள்
என்பனவாகும்.
நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்:
நாட்டுப்புறக் கதைப்பாடல் என்பது ஓரிடத்தில் வழங்கப் பெறும் புகழ்மிக்க கதையினைப் பாடலாகப் பாடுவதாகும். இவ்வாறு கதையைப் பாடலாகக் கூறுவது அல்லது பாடலில் கதை பொதிந்து வருவது கதைப் பாடல் எனப்படும். கதைப் பாடலில்
1) காப்பு அல்லது வழிபாடு
2) குரு வணக்கம்
3) வரலாறு
4) வாழி
என்ற நான்கு பகுதிகள் கட்டாயம் இடம் பெற்று இருக்கும். மேலும் இக்கதைப் பாடல்களில் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெறுதல் உண்டு.
பழமொழிகள்:
பழமையான மொழிகளே பழமொழிகள் ஆகும். அறிவாலும், அனுபவத்தாலும் பழுத்துப் போன மொழிகள் நாட்டுப்புற மக்களால் நயம்படக் கூறப்படும் பொழுது அது பழமொழி என்றாகிறது. இதைச் சொலவடை, முதுமொழி, பழஞ்சொல், முதுசொல் என்றும் கூறுவர். பழமொழிகளை,
1) அளவு அடிப்படை
2) பொருள் அடிப்படை
3) அகர வரிசை அடிப்படை
4) அமைப்பியல் அடிப்படை
5) பயன் அடிப்படை
என்ற பிரிவுகளால் ஆய்வு செய்வர்.
விடுகதைகள்:
நாட்டுப்புற மக்கள் தங்களின் அறிவுத் திறத்தைக் காட்டுவதற்காகப் புதிர்ப் பண்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்தைக் கூறுவார்கள். அதில் ஏதாவது ஒரு கருத்து மறைந்து இருக்கும். அதைக் கண்டுபிடித்து விடை கூறவேண்டும். இவ்விடுகதைகள்
நாட்டுப்புற விடுகதைகள்
இலக்கிய விடுகதைகள்
என்ற இருநிலையில் உள்ளன எனலாம்.
நாட்டுப்புறக் கலைகள்:
நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் ஆகியன நாட்டுப்புறக் கலைகளாகும். இக்கலைகள் தாம் கிராம மக்களை வாழ்விக்கும் உயிர்த்துடிப்பு மிக்கவை. இவை மக்களின் அழகியல் உணர்வுகளின் மையமாக விளங்கி ஐம்புலன்களையும் ஈர்த்து, கவலையைப் போக்கி நாட்டின் செல்வமாக விளங்குகின்றன. இக்கலைகளை,
1) சமூகச் சார்புக் கலைகள்
2) சமயச் சார்புக் கலைகள்
என்று பிரித்து உரைக்கலாம்.
இவற்றில் இடம்பெறும் ஆட்டங்கள் எனப்படும் கலைகள்:
1) சிலம்பாட்டம்
2) காவடியாட்டம்
3) கரக ஆட்டம்
4) மயிலாட்டம்
5) கும்மியாட்டம்
6) ஒயிலாட்டம்
7) கோலாட்டம்
8) பின்னல் கோலாட்டம்
9) பொய்க்கால் குதிரையாட்டம்
10) தேவராட்டம்
11) சேவையாட்டம்
12) சக்கையாட்டம்
13) கழியல் ஆட்டம்
14) சிம்ம ஆட்டம்
15) வேதாள ஆட்டம்
16) பொடிக்கழி ஆட்டம்
17) பகல் வேஷம்
18) கரடி ஆட்டம்
19) வர்ணக் கோடாங்கி
20) புலி ஆட்டம்
21) பூத ஆட்டம்
22) பேய் ஆட்டம்
23) கணியான் ஆட்டம்
24) வில்லுப் பாட்டு
25) கூத்து
26) தெருக்கூத்து
27) கழைக் கூத்து
28) பாவைக் கூத்து
29) தோற்பாவைக் கூத்து
பாடல்களின் பதிவுகள்:
கிராமத்து மக்களில் குரல் இனிமையும், பாடல்களைப் பாடும் பழக்கமும் உடையவர்களே நாட்டுப்புறப் பாடல்களைத் தங்களது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். மரபு வழி என்பதால், முன்னோர் பாடியதைப் பின்பற்றி அக்குடும்பத்திலோ உறவிலோ, உள்ளவர் யாரேனும் பாடல்களைப் பாடிப் பாடி மனனம் செய்து கொள்வர் அப்பாடல்கள் மறைவதில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓலைச் சுவடியும், அச்சுக் கலையும் இல்லாத காலத்தில் காற்றில் கலந்த கவிதைகளாக இப்பாடல்கள் விளங்கின. இப்பாடல்களில், பெரும்பாலும் மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் எதுகை, மோனை, ஒரே சொல்லே திரும்பத் திரும்ப வருதல், ஒரு தொடரில் வந்த இறுதிச் சொல் அடுத்த வரியில் முதலில் வருதல் என்னும் அந்தாதி அமைப்பில் வருதல் ஆகிய கூறுகளே இருக்கும். மேலும் ஒருவர் பாடியதைப் போன்றே அடுத்தவர் பாடினாலும், ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைத் திறனுக்கும் நயத்திற்கும் ஏற்பப் பாடல்களைப் பாடிப் பரப்புதல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாட்டுப்புற மக்களே நாட்டுப்புற இலக்கியத்தின் படைப்பாளர்கள் என்று கூற வேண்டும். இப்பாடல்கள் கூட்டு முயற்சியில் உருவானவை. மேலும் மரபு வழியாகப் பரவும் பாரம்பரியச் சிறப்பினை, போக்கினைக் கொண்டவை. இப்பாடல்களை இன்னார் தான் பாடவேண்டும். இப்படித்தான் பாடவேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது எல்லாம் கிடையாது.
நாட்டுப்புறப் படைப்புகள்:
நாட்டுப்புற மக்களின் படைப்புக்களை நாட்டுப்புற இலக்கியம், கலை என்ற இருபிரிவினுள் அடக்க முடியும். மேலும், நாட்டுப்புறக் கலை என்பதில் நம்பிக்கைகள், ஆடல், பொருள்சார் பண்பாடு ஆகியவற்றையும் சேர்த்துக் கூறுதலுண்டு.
நாட்டுப்புற இலக்கியம்:
நாட்டுப்புற மக்களால் பழக்கத்தில் பயின்று வழக்கத்தில் நிலைபெற்ற பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணங்கள் என்பன நாட்டுப்புற இலக்கியங்களாகும். இதில் நாட்டுப்புறப் பாடல்கள் என்பனவற்றை நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் சூழல் அடிப்படையில் சிந்தித்து எட்டாக வகுத்து உரைக்கின்றனர். அவையாவன,
1) தாலாட்டுப் பாடல்கள்
2) குழந்தைப் பாடல்கள்
3) காதல் பாடல்கள்
4) தொழில் பாடல்கள்
5) கொண்டாட்டப் பாடல்கள்
6) பக்திப் பாடல்கள்
7) ஒப்பாரிப் பாடல்கள்
8) பனிமலர்ப் பாடல்கள் (மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு உட்படாத பாடல்கள்) என்பவைகளாகும்.
புராணங்கள்:
'புராதனம்' என்னும் வடசொல்லில் இருந்து உருவானதே 'புராணம்'. 'புராணம்' என்பது வழிவழியாக வந்த இறைவன், இறைவி பற்றிய கருத்துகள் அடங்கிய கதைகள் எனலாம். வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் போற்றப்படுகின்றன. சைவம், வைணவம் என்ற சமயங்களுக்கு உரிய புராணங்கள் பல உள்ளன. நாட்டுப்புற மக்களின் கடவுள் வழிபாட்டில் இடம்பெறும் சிவன், முருகன், திருமால் போன்ற கடவுளர்க்குப் புராணங்கள் உள்ளன. புராணங்களை,
1) மகா புராணங்கள்
2) இதிகாச அமைப்பிலானவை
3) வர்க்கப் பெருமை விளக்குவன
4) ஊர்ச் சிறப்பைக் கூறுவன - தலபுராணம் என்று பகுத்துக் கூறலாம்
இவ்வாறு நாட்டுப்புற இலக்கியம் என்பது அக்கிராம மக்களின் மண்ணின் மணத்தோடு, உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே எடுத்துக்கூறல் என்ற அமைப்பில், இசை நயத்தோடு, இலக்கணக் கட்டுப்பாடு என்பது இல்லாது படைக்கப்படுவது ஆகும். படைப்பாளன் இவன் தான் என்று அறுதியாகக் கூற முடியாதபடி எல்லாரும் தாம் என்று கூறும் வகையில் படைக்கப்படுவது ஆகும்.
பொதுவாக, இலக்கியம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். இங்குக் கிராம மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் படைப்புகளையும் குறித்த இலக்கியமே நாட்டுப்புறவியல் இலக்கியம் ஆகும். நாட்டுப்புறவியல் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல் என்றால் என்ன? இச்சொல்லுக்கான பொருளை முதலில் புரிந்து கொண்டால் தான் நாட்டுப்புற இலக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான விளக்கத்தை இரண்டு நிலைகளில் அறிந்து கொள்ளலாம்.
அகராதிப் பொருள்
'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது'
அறிஞர்கள் கருத்து:
அறிஞர்கள் 'நாட்டுப்புறவியல்' என்ற சொல்லுக்குப் பதில் நாட்டார் வழக்காறு என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வறிஞர் நா.வானமாமலை அவர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் 'நாட்டார் வழக்காறு' என்பதாகும். இவர் வழியைப் பின்பற்றி அறிஞர் தே. லூர்து என்பாரும் நாட்டுப்புறவியல் என்பதற்கு 'நாட்டார் வழக்காறு' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர் ஆலன் டண்டி என்பவர், மக்கள் காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார்.
கைவினைப் பொருட்கள் :
மேலும் நாட்டுப்புற மக்களின் கைவினையின் ஆற்றல் திறத்தால் உருவாகும் பொருட்களுக்குத் தனித்தன்மை மிகுந்த சிறப்புகள் உண்டு. இத்தகு பொருட்களும் நாட்டுப்புற மக்களின் கலை நயத்தால் உருவாகும் தன்மையன என்பதால் இக்கைவினைப் பொருட்களும் கலை என்பதில் இடம் பெறும்.
கிராமத்து மக்கள் காலங்காலமாகப் பாரம்பரியமாகச் செய்துவரும் பொருட்கள் உண்டு. இவர்களது கைவினைத் திறத்தைக் கண்டு மக்கள் வியந்து நிற்பார்கள். இவர்களது கைவினைகள்: கைவினைப் பொருட்கள்
1) மண்பாண்டக் கலை
2) காகிதப் பொம்மைகள் செய்தல்
3) மரப் பொம்மைகள் செய்தல்
4) பாய் பின்னுதல்
5) மரவேலைப்பாடு
6) உலோகச், சிற்ப வேலைப்பாடு
7) கல் சிற்ப வேலைப்பாடு
8) சப்பரம்,தேர், தெய்வம் அலங்கரிக்கும் கலை
9) நெசவுக் கலை
10) தஞ்சாவூர்த் தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல்
நம்பிக்கைகள்:
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் இலக்கியம், கலைகள், கைவினைப் பொருட்கள் போன்று இடம் பெறும் மற்றொரு முக்கியக்கூறு நம்பிக்கை என்பதாகும். நம்பிக்கையினை மனிதனின் மூன்றாவது கை என்பர். இந்நம்பிக்கை மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம் பெறுவதாகும். இயற்கையின் மழை, விலங்கு, பறவை குறித்தும்; மனிதரின் பிறப்பு, பருவமடைதல், விருந்தினர் வருகை, உழவு, என்பவை பற்றியும்; திசை, நட்சத்திரம், ராசி, கோலமிடுதல், விதி பற்றிய சிந்தனை, இறப்பு போன்ற பலவற்றிலும் கிராமத்து மக்களிடம் காணப்படும் அழுத்தமான நம்பிக்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்நம்பிக்கைகளில் காரண காரியங்களை ஆராய முடியும். அறிவியல் போன்று வன்மை, மென்மைகளை ஆராய்தல் என்னும் போது கிராமத்து மக்களின் உள்ளப்பாங்கு, பண்பாடு ஆகியவற்றை அறிய முடியும்.
நாட்டார்:
நாட்டுப்புறத்து மக்களாம் கிராமத்து மக்களை நாட்டார் என்றும் கூறுவதுண்டு. இச்சொல் குறித்த தகவல்கள் சிலவற்றை அறிந்து கொள்வது மிகவும் தேவையானதாகும். 'நாட்டார்' என்ற சொல் மக்களுள் ஒரு நிலப்பகுதியினர் என்ற பொருளில்தான் நாட்டுப்புற இலக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'நாட்டார்' என்ற சொல் இக்காலத்தில் பயன்படத் தொடங்கி விட்டது. இதனால், 'நாட்டார்' என்பது நாட்டுப்புறத்தாரை மட்டுமே குறிக்கும் என்பதை நாட்டுப்புறவியல் இலக்கியம் கற்பவர்கள் தெளிவுபட முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டார் – சொல்லாட்சி:
நாட்டுப்புறவியல் அறிஞர் நா. வானமாமலை, முதன்முதலில் நாட்டுப்புறத்தாரை 'நாட்டார்' என்று குறிப்பிட்டு அவர்களது வரலாற்றினை, இலக்கியத்தைக் குறித்து எழுதுவதை 'நாட்டார் வரலாறு’ என்று எடுத்துக் கூறினார். தமிழ்ப் பேரகராதி நாட்டார் என்ற சொல் குறித்துப் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றது.
அகராதியின் கருத்துப்படி 'நாட்டார்' என்பது ஒரு கூட்டத்தாருக்கு உரியது என்பதாக இல்லை. மேலும் 'நாட்டார்' என்ற சொல்லாட்சி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட மக்களைச் சுட்டுவதாக வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகு வரன்முறைகளுக்கு உட்படாத சொல்லாக, நாட்டுப்புறத்தாரே 'நாட்டார்' என்று நாட்டுப்புறவியல் அறிஞர்கள் விளக்கம் தந்தனர். இச்சொல்லின் அடிப்படையில் நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல்வேறு கலைச் சொற்களையும் உருவாக்கியுள்ளனர். அச்சொற்களைத் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.
கலைச்சொற்கள் பட்டியல்:
• நாட்டுப்புற வழக்காறு
• நாட்டுப்புறவியல்
• நாட்டுப்புற இலக்கியம்
• நாட்டுப்புறப் பாடல்
• நாட்டுப்புறக் கலை
• நாட்டுப்புற நம்பிக்கைகள்
இச்சொற்களை அறிந்து கொண்டால் இவ்விலக்கியம் குறித்துப் படிப்பதற்குத் துணையாக இருக்கும்.
நாட்டுப்புறக் கதைகள்:
நாட்டுப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வி போன்று, அறக்கோட்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைக் கீழ்க்காணும் முறையில் பகுத்து உரைப்பர். அவையாவன:
1) மனிதக் கதைகள்
2) விலங்குக் கதைகள்
3) மந்திர தந்திரக் கதைகள்
4) தெய்வக் கதைகள்
5) இதிகாச புராணக் கதைகள்
6) பல்பொருள் பற்றிய கதைகள்
என்பனவாகும்.
நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்:
நாட்டுப்புறக் கதைப்பாடல் என்பது ஓரிடத்தில் வழங்கப் பெறும் புகழ்மிக்க கதையினைப் பாடலாகப் பாடுவதாகும். இவ்வாறு கதையைப் பாடலாகக் கூறுவது அல்லது பாடலில் கதை பொதிந்து வருவது கதைப் பாடல் எனப்படும். கதைப் பாடலில்
1) காப்பு அல்லது வழிபாடு
2) குரு வணக்கம்
3) வரலாறு
4) வாழி
என்ற நான்கு பகுதிகள் கட்டாயம் இடம் பெற்று இருக்கும். மேலும் இக்கதைப் பாடல்களில் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெறுதல் உண்டு.
பழமொழிகள்:
பழமையான மொழிகளே பழமொழிகள் ஆகும். அறிவாலும், அனுபவத்தாலும் பழுத்துப் போன மொழிகள் நாட்டுப்புற மக்களால் நயம்படக் கூறப்படும் பொழுது அது பழமொழி என்றாகிறது. இதைச் சொலவடை, முதுமொழி, பழஞ்சொல், முதுசொல் என்றும் கூறுவர். பழமொழிகளை,
1) அளவு அடிப்படை
2) பொருள் அடிப்படை
3) அகர வரிசை அடிப்படை
4) அமைப்பியல் அடிப்படை
5) பயன் அடிப்படை
என்ற பிரிவுகளால் ஆய்வு செய்வர்.
விடுகதைகள்:
நாட்டுப்புற மக்கள் தங்களின் அறிவுத் திறத்தைக் காட்டுவதற்காகப் புதிர்ப் பண்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்தைக் கூறுவார்கள். அதில் ஏதாவது ஒரு கருத்து மறைந்து இருக்கும். அதைக் கண்டுபிடித்து விடை கூறவேண்டும். இவ்விடுகதைகள்
நாட்டுப்புற விடுகதைகள்
இலக்கிய விடுகதைகள்
என்ற இருநிலையில் உள்ளன எனலாம்.
நாட்டுப்புறக் கலைகள்:
நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் ஆகியன நாட்டுப்புறக் கலைகளாகும். இக்கலைகள் தாம் கிராம மக்களை வாழ்விக்கும் உயிர்த்துடிப்பு மிக்கவை. இவை மக்களின் அழகியல் உணர்வுகளின் மையமாக விளங்கி ஐம்புலன்களையும் ஈர்த்து, கவலையைப் போக்கி நாட்டின் செல்வமாக விளங்குகின்றன. இக்கலைகளை,
1) சமூகச் சார்புக் கலைகள்
2) சமயச் சார்புக் கலைகள்
என்று பிரித்து உரைக்கலாம்.
இவற்றில் இடம்பெறும் ஆட்டங்கள் எனப்படும் கலைகள்:
1) சிலம்பாட்டம்
2) காவடியாட்டம்
3) கரக ஆட்டம்
4) மயிலாட்டம்
5) கும்மியாட்டம்
6) ஒயிலாட்டம்
7) கோலாட்டம்
8) பின்னல் கோலாட்டம்
9) பொய்க்கால் குதிரையாட்டம்
10) தேவராட்டம்
11) சேவையாட்டம்
12) சக்கையாட்டம்
13) கழியல் ஆட்டம்
14) சிம்ம ஆட்டம்
15) வேதாள ஆட்டம்
16) பொடிக்கழி ஆட்டம்
17) பகல் வேஷம்
18) கரடி ஆட்டம்
19) வர்ணக் கோடாங்கி
20) புலி ஆட்டம்
21) பூத ஆட்டம்
22) பேய் ஆட்டம்
23) கணியான் ஆட்டம்
24) வில்லுப் பாட்டு
25) கூத்து
26) தெருக்கூத்து
27) கழைக் கூத்து
28) பாவைக் கூத்து
29) தோற்பாவைக் கூத்து
பாடல்களின் பதிவுகள்:
கிராமத்து மக்களில் குரல் இனிமையும், பாடல்களைப் பாடும் பழக்கமும் உடையவர்களே நாட்டுப்புறப் பாடல்களைத் தங்களது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். மரபு வழி என்பதால், முன்னோர் பாடியதைப் பின்பற்றி அக்குடும்பத்திலோ உறவிலோ, உள்ளவர் யாரேனும் பாடல்களைப் பாடிப் பாடி மனனம் செய்து கொள்வர் அப்பாடல்கள் மறைவதில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓலைச் சுவடியும், அச்சுக் கலையும் இல்லாத காலத்தில் காற்றில் கலந்த கவிதைகளாக இப்பாடல்கள் விளங்கின. இப்பாடல்களில், பெரும்பாலும் மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் எதுகை, மோனை, ஒரே சொல்லே திரும்பத் திரும்ப வருதல், ஒரு தொடரில் வந்த இறுதிச் சொல் அடுத்த வரியில் முதலில் வருதல் என்னும் அந்தாதி அமைப்பில் வருதல் ஆகிய கூறுகளே இருக்கும். மேலும் ஒருவர் பாடியதைப் போன்றே அடுத்தவர் பாடினாலும், ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைத் திறனுக்கும் நயத்திற்கும் ஏற்பப் பாடல்களைப் பாடிப் பரப்புதல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாட்டுப்புற மக்களே நாட்டுப்புற இலக்கியத்தின் படைப்பாளர்கள் என்று கூற வேண்டும். இப்பாடல்கள் கூட்டு முயற்சியில் உருவானவை. மேலும் மரபு வழியாகப் பரவும் பாரம்பரியச் சிறப்பினை, போக்கினைக் கொண்டவை. இப்பாடல்களை இன்னார் தான் பாடவேண்டும். இப்படித்தான் பாடவேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது எல்லாம் கிடையாது.
நாட்டுப்புறப் படைப்புகள்:
நாட்டுப்புற மக்களின் படைப்புக்களை நாட்டுப்புற இலக்கியம், கலை என்ற இருபிரிவினுள் அடக்க முடியும். மேலும், நாட்டுப்புறக் கலை என்பதில் நம்பிக்கைகள், ஆடல், பொருள்சார் பண்பாடு ஆகியவற்றையும் சேர்த்துக் கூறுதலுண்டு.
நாட்டுப்புற இலக்கியம்:
நாட்டுப்புற மக்களால் பழக்கத்தில் பயின்று வழக்கத்தில் நிலைபெற்ற பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணங்கள் என்பன நாட்டுப்புற இலக்கியங்களாகும். இதில் நாட்டுப்புறப் பாடல்கள் என்பனவற்றை நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் சூழல் அடிப்படையில் சிந்தித்து எட்டாக வகுத்து உரைக்கின்றனர். அவையாவன,
1) தாலாட்டுப் பாடல்கள்
2) குழந்தைப் பாடல்கள்
3) காதல் பாடல்கள்
4) தொழில் பாடல்கள்
5) கொண்டாட்டப் பாடல்கள்
6) பக்திப் பாடல்கள்
7) ஒப்பாரிப் பாடல்கள்
8) பனிமலர்ப் பாடல்கள் (மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு உட்படாத பாடல்கள்) என்பவைகளாகும்.
புராணங்கள்:
'புராதனம்' என்னும் வடசொல்லில் இருந்து உருவானதே 'புராணம்'. 'புராணம்' என்பது வழிவழியாக வந்த இறைவன், இறைவி பற்றிய கருத்துகள் அடங்கிய கதைகள் எனலாம். வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் போற்றப்படுகின்றன. சைவம், வைணவம் என்ற சமயங்களுக்கு உரிய புராணங்கள் பல உள்ளன. நாட்டுப்புற மக்களின் கடவுள் வழிபாட்டில் இடம்பெறும் சிவன், முருகன், திருமால் போன்ற கடவுளர்க்குப் புராணங்கள் உள்ளன. புராணங்களை,
1) மகா புராணங்கள்
2) இதிகாச அமைப்பிலானவை
3) வர்க்கப் பெருமை விளக்குவன
4) ஊர்ச் சிறப்பைக் கூறுவன - தலபுராணம் என்று பகுத்துக் கூறலாம்
இவ்வாறு நாட்டுப்புற இலக்கியம் என்பது அக்கிராம மக்களின் மண்ணின் மணத்தோடு, உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே எடுத்துக்கூறல் என்ற அமைப்பில், இசை நயத்தோடு, இலக்கணக் கட்டுப்பாடு என்பது இல்லாது படைக்கப்படுவது ஆகும். படைப்பாளன் இவன் தான் என்று அறுதியாகக் கூற முடியாதபடி எல்லாரும் தாம் என்று கூறும் வகையில் படைக்கப்படுவது ஆகும்.