ராசகுருவை பழிக்குப் பழி வாங்குதல் :
ஒரு நாள் அதிகாலை நேரம் ராசகுரு குளத்திற்கு குளிக்கச் சென்றபோது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராசகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். மறைந்திருந்த தெனாலிராமன் ராசகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான். குளித்து முடித்து கரையேறிய ராசகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். அப்போது தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
“தெனாலிராமா எனது துணிமணிகளைக் கொடு” என்று ராசகுரு கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ “உமது துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள்” என்றான்.
“ராமா... என் துணிமணிகளைக் கொடுத்துவிடு. இன்னும் சிறிது நேரத்தில் சூரிய உதயம் ஆகப்போகிறது. இக் குளத்திற்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் “என் நிபந்தனைக்கு உட்பட்டால் உங்களுடைய துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது” என்று கூறி விட்டான். “என்னை அரண்மனை வரை உமது தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன் இல்லையென்றால் தரமுடியாது” என்று கூறிவிட்டான்.
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்துகொண்டதால் ராசகுரு அதற்குச் சம்மதித்தார். தெனாலிராமன் துணிமணிகளை ராசகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராசகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு “தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார். உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் “ஐயா என்னை மன்னியுங்கள். ராசகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன்” என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராசகுரு தெனாலிராமன் தோள்மீது ஏறி உட்கார்ந்து கொண்டார். தெனாலிராமன் ராசகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். அவர்கள் ராசகுருவைப் பிடித்து நையப்புடைத்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.
இதைப் பார்த்த மன்னர் “ராசகுருவை ஏன் அடித்தீர்கள்” என வினவினார் அதற்கு காவலாட்கள் “தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர் இவரே, தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம்” என்றனர். மன்னர் ராசகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார்.
ராசகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார். தெனாலிராமனின் செய்கை மன்னருக்கு நகைச்சுவையாக இருந்தாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார். ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “தெனாலிராமா நீ ராசகுருவை அவமானப்படுத்திவிட்டாய், மேலும் அவரை அடி உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரச்சேதம் செய்ய உத்தரவு இடுகின்றேன்” என மன்னர் கட்டளையிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினான். அவன் தன் குல தெய்வமான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.
காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும், பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர்.
“இனி இவ்வூரில் இருக்காமல் வேறு இடம் போய்விடு” என்று சொன்னார்கள். அவர்களிடம் “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.
காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் “தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம்” என்று சொல்ல மன்னரும் அதை உண்மை என்று நம்பினார்.
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்து “நியாயமாக ஒரு அந்தணரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்” என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.
இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் “அவன் ஆத்மா சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூசை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராசகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆத்மாவிற்க்கு பூசை செய்ய உத்தரவிட்டார். இதைக்கேட்ட ராசகுரு நடுநடுங்கினார். “நடுக்காட்டில் நள்ளிரவு நேரத்தில் பூசை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது” என்றார். “அப்படியென்றால் துணைக்கு சில அந்தணர்களையும் அழைத்துச் செல்லுங்கள்” என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராசகுரு பூசைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு அந்தணர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூசை நடத்தினார்கள். ராசகுரு பூசையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து “தெனாலிராமனின் ஆத்மாவாகிய பிரம்மராட்சசனே” என்று பலத்த குரலில் அழைத்து “எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆத்மா சாந்தியடைய பூசை செய்துள்ளோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்த ராசகுருவும்,அந்தணர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறியடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பி, நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்கள். இதைக் கேட்ட மன்னர் இதற்குப் பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்த பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆத்மாவாகி இருக்கும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்கான வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆத்மாவாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவி, “மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால்தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும்” என்றார்.
“அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா?” என மன்னர் கேட்டார். “ஓ... தாராளமாக என்னால் முடியும்” என துறவி கூறினார்.
மன்னர் மகிழ்ந்து “தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும்” என்றார். உடனே துறவி, அணிந்திருந்த வேடத்தைக் கலைத்து, “நான்தான் தெனாலிராமன்... துறவி வேடத்தில் வந்தேன்” என்றார்.
இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டு, ஆயிரம் பொன்னையும் பரிசளித்தார்.
ஒரு நாள் அதிகாலை நேரம் ராசகுரு குளத்திற்கு குளிக்கச் சென்றபோது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராசகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். மறைந்திருந்த தெனாலிராமன் ராசகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான். குளித்து முடித்து கரையேறிய ராசகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். அப்போது தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
“தெனாலிராமா எனது துணிமணிகளைக் கொடு” என்று ராசகுரு கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ “உமது துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள்” என்றான்.
“ராமா... என் துணிமணிகளைக் கொடுத்துவிடு. இன்னும் சிறிது நேரத்தில் சூரிய உதயம் ஆகப்போகிறது. இக் குளத்திற்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் “என் நிபந்தனைக்கு உட்பட்டால் உங்களுடைய துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது” என்று கூறி விட்டான். “என்னை அரண்மனை வரை உமது தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன் இல்லையென்றால் தரமுடியாது” என்று கூறிவிட்டான்.
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்துகொண்டதால் ராசகுரு அதற்குச் சம்மதித்தார். தெனாலிராமன் துணிமணிகளை ராசகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராசகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு “தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார். உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் “ஐயா என்னை மன்னியுங்கள். ராசகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன்” என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராசகுரு தெனாலிராமன் தோள்மீது ஏறி உட்கார்ந்து கொண்டார். தெனாலிராமன் ராசகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். அவர்கள் ராசகுருவைப் பிடித்து நையப்புடைத்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.
இதைப் பார்த்த மன்னர் “ராசகுருவை ஏன் அடித்தீர்கள்” என வினவினார் அதற்கு காவலாட்கள் “தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர் இவரே, தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம்” என்றனர். மன்னர் ராசகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார்.
ராசகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார். தெனாலிராமனின் செய்கை மன்னருக்கு நகைச்சுவையாக இருந்தாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார். ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “தெனாலிராமா நீ ராசகுருவை அவமானப்படுத்திவிட்டாய், மேலும் அவரை அடி உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரச்சேதம் செய்ய உத்தரவு இடுகின்றேன்” என மன்னர் கட்டளையிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினான். அவன் தன் குல தெய்வமான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.
காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும், பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர்.
“இனி இவ்வூரில் இருக்காமல் வேறு இடம் போய்விடு” என்று சொன்னார்கள். அவர்களிடம் “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.
காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் “தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம்” என்று சொல்ல மன்னரும் அதை உண்மை என்று நம்பினார்.
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்து “நியாயமாக ஒரு அந்தணரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்” என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.
இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் “அவன் ஆத்மா சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூசை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராசகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆத்மாவிற்க்கு பூசை செய்ய உத்தரவிட்டார். இதைக்கேட்ட ராசகுரு நடுநடுங்கினார். “நடுக்காட்டில் நள்ளிரவு நேரத்தில் பூசை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது” என்றார். “அப்படியென்றால் துணைக்கு சில அந்தணர்களையும் அழைத்துச் செல்லுங்கள்” என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராசகுரு பூசைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு அந்தணர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூசை நடத்தினார்கள். ராசகுரு பூசையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து “தெனாலிராமனின் ஆத்மாவாகிய பிரம்மராட்சசனே” என்று பலத்த குரலில் அழைத்து “எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆத்மா சாந்தியடைய பூசை செய்துள்ளோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்த ராசகுருவும்,அந்தணர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறியடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பி, நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்கள். இதைக் கேட்ட மன்னர் இதற்குப் பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்த பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆத்மாவாகி இருக்கும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்கான வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆத்மாவாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவி, “மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால்தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும்” என்றார்.
“அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா?” என மன்னர் கேட்டார். “ஓ... தாராளமாக என்னால் முடியும்” என துறவி கூறினார்.
மன்னர் மகிழ்ந்து “தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும்” என்றார். உடனே துறவி, அணிந்திருந்த வேடத்தைக் கலைத்து, “நான்தான் தெனாலிராமன்... துறவி வேடத்தில் வந்தேன்” என்றார்.
இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டு, ஆயிரம் பொன்னையும் பரிசளித்தார்.